Wednesday, August 28, 2019

நாட்டுக்காக தீர்மானம் எடுக்க வேண்டிய கடைசித் தருணமே ஜனாதிபதித் தேர்தல்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நாட்டுக்காக இந்நாட்டு மக்கள் தீர்மானம் எடுக்க வேண்டிய கடைசித் தருணமாகும் என எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டார்.

நாட்டைக் காப்போம் - நாட்டை உருவாக்குவோம் - நாட்டு மக்களே ஒன்றுபடுவோம் என்ற தொனிப்பொருளினாலான 'உரையாடல் வட்டம்' ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்குகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

'உரையாடல் வட்ட'த்தின் தலைவர் கெவிந்து குமாரத்துங்க உரையாற்றும்போது:br/>
'மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதித் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தி எனும் பெயரில் தயாராகிவருகின்றது. காட்டிக் கொடுக்கும் செயலுக்குத் தலைமத்துவத்தைக் கொடுத்த கரு ஜயசூரிய நாட்டுக்கு எதிரான சட்ட மூலத்தைக் கொண்டுவந்த போது என்ன செய்தார்?

காணாமற் போனோர் பற்றிய சட்டமூலத்தை விவாதத்திற்கு எடுக்காமலேயே நிறைவேற்றினார். அவர், நாட்டிலுள்ள ஒரு துஷ்டர். இவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள சஜித் பிரேமதாச குறிப்பிடுகிறார்.

பெளத்த மதபீடத்தையும், இராணுவத்தினரையும் பாதுகாப்பாராம்.. மங்கள சமரவீரவின் மேடையிலிருந்து முழங்குகின்றார். பெளத்த பிக்குமாரை இழிந்துரைத்து இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற நாடு உருவாக்கப்பட்டு வருகின்றபோது அதனை நாசமாக்கினார். இப்போது எங்களுக்கு இப்பாேதைக்கு நினைவுக்கு வருவது கோத்தபாய ராஜபக்ஷ மட்டுமே...

குடியுரிமை பற்றிய நிகழ்ச்சி நிரலைக் கொண்டுவந்தார்கள். அதன் சிறிய தலைப்பாக இருப்பது தேசிய பாதுகாப்பு. அதுபற்றிப் பேசுவோர்தான் தேசிய பாதுகாப்பை இல்லாதொழிக்கச் சென்றவர்கள். இப்போது தேசிய பாதுகாப்பை நிகழ்ச்சி நிரலில் இணைத்திருக்கிறார்கள். நாங்கள் ஓர் அடியைத் தவறிழைத்தால் அதனைச் சரிசெய்ய இயலாது' எனக் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com