Thursday, August 8, 2019

சட்ட விரோத செயலுக்காக அமைச்சரவை பத்திரம் கொண்டுவந்தார் சஜித்... அமைச்சரவை நிராகரித்தது...

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கியுள்ள பதவிகள் தொடர்பில், அமைச்சரவை அனுமதியை நிராகரித்துள்ளது.

இந்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் சஜித் பிரேமதாச முன்வைத்திருந்தார்.

மேற்படி அதிகார சபையில் நீண்ட காலம் பணிபுரிந்துள்ள அந்த அதிகாரிகள் ஓய்வு பெற்ற பின்னரும் அவர்களுக்கு சம்பளம் மற்றும் படிகளை வழங்கி அவர்களை உயர் பதவிகளில் நிறுத்துவது தொடர்பாகவும், குறித்த மேல் பதவிகள் வகிப்போருக்கு சம்பளம் வழங்குவதற்காக அநுமதி கோரியுமே அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டிருந்தது.

இவர்கள் இரண்டு வருடங்களாக பதவியில் இருப்பது சட்ட விரோத செயல் என்றும் அதற்காக ஊதியம் வழங்குவது தொடர்பிலும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com