Wednesday, March 6, 2019

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் காரணமாக, கடும் வாகன நெரிசல்.

பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக, கொழும்பில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்று திரண்டு, கொழுப்பு நகரமண்டப வீதியில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அண்மையில் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் காவல்துறையினரால், கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டும் என, ஏனைய பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இன்று குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து, ஆர்ப்பாட்டம் இடம்பெறும் கொழுப்பு நகர மண்டப வீதியில், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், இந்த பாதையை பயன்படுத்தும் வாகன சாரதிகள், மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com