Wednesday, March 6, 2019

பசு மாடுகள் இறக்குமதியில் மோசடி - பால் பண்ணையாளர்கள்

பால் பண்ணையாளர்கள் 25 பேர் கையெழுத்துடன், பசு மாடுகளின் இறக்குமதி குறித்து பல முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பசு மாடுகள், அவுஸ்திரேலியாவில் இறக்குமதி செய்யப்படும் போது, பல மோசடிகள் இடம்பெறுவதாக தெரிவித்து, பால் பண்ணையாளர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கு 20,000 பசுக்களை அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்ய,கிராமிய பொருளாதார அமைச்சினால் உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இறக்குமதி செய்யப்பட்டு தமக்கு வழங்கப்பட்ட பசுக்கள் அனைத்தும், தரக்குறைவானவை என பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தரக்குறைவான பசு மாடுகளை வளர்ப்பதால், வருமானம் போதியளவு கிடைப்பதில்லை என்றும், இதனால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com