Wednesday, March 6, 2019

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் - சட்டமா அதிபர் திணைக்களம்

கொழும்பிலுள்ள தமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்ற பத்திரம் தாக்கல் ஒன்று செய்யப்படவுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்கள தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில், தமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டனர். இது குறித்த தொடர் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகொடவிடம், கடந்த மாதம் 21 மற்றும் 22 ஆம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் பொருட்டு விசாரணை அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்றனர்.

எனினும் அதிகாரிகள் சென்ற வீடு, முன்னாள் கடற்படைத் தளபதிக்கு சொந்தமானதல்ல என்பதுடன், அது போலியாக வழங்கப்பட்ட முகவரி என்பது கண்டறியப்பட்டது.

இதனை அடுத்து முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவின் கடவுச்சீட்டை முடக்கவும், அவரை உடன் கைது செய்யவும், நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com