Wednesday, March 6, 2019

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடு குறித்த விசாரணைகள் ஆரம்பம்

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் குறித்த விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். மட்டக்களப்பு - சவுக்கடி பகுதியில் வைத்து மர்மமான முறையில் எலும்புக் கூடு ஒன்று மீட்க்கப்பட்டிருந்தது.

அப்பகுதியில் கிணறு ஒன்றை தோண்டுவதற்கு முயற்சிக்கப்பட்ட போதே, குறித்த மனித எலும்புக் கூடு மீட்கப்பட்டது. இதனை அடுத்து,
மட்டக்களப்பு காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு சென்ற வந்த காவல்துறையினர் எலும்புக் கூடை மீட்டதுடன், இது குறித்த விசாரணங்களை ஆரம்பித்துள்ளனர்.

இதனிடையே மன்னார் மனித எலும்பு கூடுகளின் கார்பன் பரிசோதனை அறிக்கையின் வன்பிரதி, மன்னார் நீதவானிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மன்னார் மந்த எலும்பு கூடுகளின் அகழ்வு பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச இதனை உறுதிப்படுத்தினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com