Wednesday, March 6, 2019

மரண சடங்கிற்காக, நான்கு நாட்கள் வீதி மூடப்பட்டது.

மரண சடங்குகளின் நிமித்தம் நான்கு நாட்களாக பகல் இரவு முழுவதும், பிரதான வீதியொன்று மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி நற்பிட்டிமுனை கிராமத்தை இணைக்கும் வீதியே, இவ்வாறு மூடப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மரண வீட்டு நிகழ்வொன்றிறற்காக, நிழல் குடை அமைக்கப்பட்டது.

எனினும் தற்போது வரை நிழல் குடை அகற்றப்படாமையினால் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன் அவ்வீதியினால் பயணம் செய்வோர் மாற்று வீதியை பயன்படுத்துகின்றனர்.

அங்குள்ள இளைஞர்கள் சிலர், குறித்த நிழல் கூடையில் கரம் விளையாடி வருவதாகவும், வீதியால் செல்வோரை மாற்று வீதியால் செல்லுமாறு அச்சுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தால் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை தொடர காரணமாக அமையும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, மக்களின் கோரிக்கையாகும்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com