Wednesday, March 6, 2019

சொந்த காணிகளை விடுவித்த ஜனாதிபதிக்கு, வலிகாமம் வடக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

தமது சொந்த காணிகளை விடுவித்த ஜனாதிபதிக்கு, மனமார்ந்த நன்றிகளையும், மகிழ்ச்சியும் வலிகாமம் வடக்கு மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த 20 ஏக்கர் காணி கடந்த மார்ச் 4 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட நிலையில், அங்கு தற்போது குடியேறியுள்ள பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விடுவிக்கப்பட்ட பகுதிகளான வலி.வடக்கு, பலாலி கிழக்கு, ஜே.253 கிராம சேவையாளர் பிரிவில் 1 ஏக்கரும் 120 குழியும் மயிலிட்டி துறை வடக்கு ஜே.251 கிராம சேவையாளர் பிரிவில் 3 ஏக்கரும் ஜே.246 கிராம சேவையாளர் பிரிவில் 13 ஏக்கரும் 155.6 குழியும், அதன் பாதையுமாக மொத்தம் 20 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளில் பொதுமக்கள் தற்போது சிரமதான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் விடுவிக்கப்பட்ட பகுதியில் மயிலிட்டி துறை வடக்கில் கிராம சேவகர் பிரிவான ஜே-251 சில பகுதிகளும் உள்ளடங்குகிறது.மேலும் மயிலிட்டி கடற்கரையோரமாக விடுவிக்கப்பட்ட மக்களின் காணியில் தென்னங்கன்றுகளை இராணுவத்தினர் நாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விடுவிக்கப்பட்ட வலி.வடக்கில் உள்ள காணிகளில் மயிலிட்டி வடக்கில் வீதியில் ஒருபக்க மக்களின் வீடுகளில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளன. எனினும் மற்றைய பக்கம் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

அத்துடன் இராணுவத்தினர் ஏற்கனவே அங்கு பயன்படுத்திய சில வீடுகள் ஓரளவு நல்ல நிலையில் உள்ளதுடன் இராணுவத்தினரால் புதிதாக கட்டப்பட்டவை அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




















































0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com