Thursday, March 7, 2019

அனைத்து மின்சார பாவனையாளர்களுக்குமான முக்கிய அறிவிப்பு

தினசரி மின்சாரப் பாவனையின்போது சிக்கனத்தை கடைப்பிடிக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

அண்மைய நாட்களில் நிலவிய வரட்சியுடனான காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வலுவாக குறைவடைந்துள்ளது. இந்த வறட்சி காரணமாக, காசல் ரீ, மௌசாகலை, கொத்மலை, விக்டோரியா, ரன்தெனிகல மற்றும் சமனலவெவ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 41.8 வீதமாக குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக மின்சார பாவனையாளர்கள் அனைவரும் மிகவும் சிக்கனமான முறையில் மின்சாரத்தை பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இந்த வருடத்தில் மாத்திரமன்றி வருடா வருடம் மார்ச் மற்றும் ஏப்பரல் மாதங்களில் வறட்சி காரணமாக நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைவதனால், நீர் மின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படுகின்றது. இதனால் குறித்த இரண்டு காலப்பகுதியில் அனைவரும் மின் பாவனையை குறைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com