Thursday, March 7, 2019

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மீண்டும் இயக்கம்

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் ​ மற்றும் வணிக விஞ்ஞான பீடங்களின் கற்றல் நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக்கத்தின் முகாமைத்துவ பீடம் கடந்த 21 ஆம் திகதி முதல் மூடப்பட்ட நிலையிலேயே, இன்று மீண்டும் திறக்கப்பட்டது. முன்னதாக குறித்த பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து கற்றலை தொடரும் மாணவர்களை நேற்று மாலை வேளைக்குள் விடுதிக்கு சமூகமளித்திருக்க வேண்டும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com