Tuesday, March 5, 2019

மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில், போதைப் பொருள் வர்த்தகர்கள், அரசியல் வாதிகளுடன் நெருங்கிச் செயல்பட்டனர் - நளிந்த ஜயதிஸ்ஸ

மஹிந்த ராஜபக்சவின் நிர்வாக காலத்தில் போதைப் பொருள் வர்த்தகர்கள் அரசியல் வாதிகளுடன் மிகவும் நெருங்கிச் செயற்பட்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜேவிபியின் பண்டாரகம தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த அரசாங்கம் போதைப் பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. அதற்கு பிரதான காரணம், அப்போதைய போதைப்பொருள் வர்த்தகர்கள், அரசியல் வசதிகளுடன் நெருக்கமான உறவை பேணி வந்தமையாகும்.

அரசியல் பின்புலத்துடன் போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு, தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவே, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இவ்வாறு அரசியல்வாதிகள் இந்த நட்பை கொண்டிருந்தனர் என, பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com