Tuesday, March 5, 2019

நான்கு பெண்கள், ஹெரோயினுடன் கைது - காவல்துறை தலைமையகம்

ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அனுராதபுரம், கிரேன்ட்பாஸ், அங்குலான ஆகிய பகுதிகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் 26, 35, 49 மற்றும் 68 வயதுகளை உடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட பெண்களிடம் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com