Tuesday, March 5, 2019

வெள்ள பாதிப்புக்கு உள்ளான பாடசாலைகள், விரைவில் அபிவிருத்தி செய்யப்படும் - ஆளுநர் சுரேன் ராகவன்

கடந்த தினங்களில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையில் போது, ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாண பாடசாலைகள், விரைவில் அபிவிருத்தி செய்யப்படும் என, மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன் தெரிவித்துள்ளார்.

இதன் முதல் கட்ட நடவடிக்கைகளுக்காக 315 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் எட்டு பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 11 பாடசாலைகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக குறித்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பாடசாலைகளை விரைவில் அபிவிருத்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக, வட மாகாண ஆளுநர், கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com