Thursday, March 14, 2019

யாழ் அரசியல் அடிவருடிகளின் போராட்டத்திற்கு மீனவர் சங்கம் கறுப்புக்கொடி!

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஒருதொகுதியினர் காலாகாலமாக அரசியல்வாதிகளின் அடிவருடிகளாகவே செயற்பட்டு வருகின்றனர் என்பது யாவரும் அறிந்த விடயம். தமது எஜமானர்களின் அரசியல் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இவர்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு, தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மேற்படி போராட்டத்தில் தமது தரப்பினர், கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக, குறித்த சம்மேளனம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் வே.தவச்செல்வன் இதனை தெரிவித்தார்.

சர்வதேச சமுதாயம், இலங்கைக்கு இனியொருபோதும் காலநீடிப்பை வழங்கக்கூடாது என வலியுறுத்தி யாழ்ப்பாண மாவட்ட பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய போராட்டம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

மாணவர்களின் போராட்டத் தினத்தில், தமது தரப்பினர் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதுடன், அன்றைய தினம் கறுப்புகொடிகளை பறக்க விட்டு ஆதரவளிக்க உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்த விதிமீறல்கள் குறித்த சர்வதேச விசாரணைகளை இந்த அரசாங்கம் புறக்கணித்து வருகின்றது.

இந்த விடயத்தில், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அரசாங்கத்தோடு இணைந்து கொண்டிருக்கின்றமை தமக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் வே.தவச்செல்வன் தெரிவித்தார்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com