Thursday, March 14, 2019

18 மாணவர்களை தாக்கிய ஆசிரியர், விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

ஐந்தாம் தர மாணவர்கள் 18 பேரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - பூநொச்சிமுனை பகுதியில் கல்வி பயிலும் மாணவர்களே, தமது ஆசிரியரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த தாக்குதலை அடுத்து குறித்த மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தம்மால் வழங்கப்பட்ட வீட்டுப்பாடங்களை சரிவரச் செய்யவில்லை என்று தெரிவித்து, குறித்த ஆசிரியர் வகுப்பறையில் வைத்து 18 மாணவர்களை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மட்டக்களப்பு காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் ஆசிரியர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

அத்துடன் இன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த ஆசிரியரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com