Friday, March 8, 2019

கம்பெரலிய வேலைத் திட்டத்தின் மூலம் சிறந்த அபிவிருத்தி திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன - தலதா அத்துகோரல

கம்பெரலிய வேலைத் திட்டத்தின் கீழ் இரத்தினபுரி மாவட்டத்தில் 171 அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு அமைச்சர் தலதா அத்துகோரல தலைமையில் இடம்பெற்றது.

வீதி அபிவிருத்தி, வழிபாட்டுத் தலங்களின் புனர்நிர்மாணம், விளையாட்டு மைதானங்களை அமைத்தல், மின்சார விநியோகம் போன்ற வேலைத்திட்டங்களும் இதில் உள்ளடங்குகின்றன. இதற்கொன இரண்டாயிரத்து 40 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை லக்கல புதிய மாதிரிக் கிராமம் புகையிலைப் பொருள் மற்றும் பொலித்தீன் அற்ற வலயமாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நரகத்தில் புகையிலைப் பொருள் விற்பனை செய்வதைத் தடுக்கும் வேலைத்திட்டத்திற்க வியாபார சமூகத்தினரின் சிறந்த ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவதாக லக்கல பிரதேச சபையின் செயலாளர் எஸ்.டி.பி.ஜயசூரிய தெரிவித்தார்.

லக்கல நகரத்தில் அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும்; புகையிலைப் பொருள் பாவனையற்ற நிறுவனமாக மாற்றப்படவுள்ளன. குறிப்பாக எதிர்காலத்தில் பொலித்தீன் பாவனையற்ற வலயமாகவும் நரகத்தை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதேச சபையின் செயலாளர் எஸ்.டி.பி.ஜயசூரிய தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com