Friday, March 8, 2019

எதிர்வரும் 15 ஆம் திகதி, கச்சத்தீவு திருவிழா ஆரம்பம்

வருடம் தோறும் கொண்டாடப்படும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த வருடமும் ஒன்று திரண்டு அங்கு வருகை தரவுள்ளனர்.

இந்த நிலையில், கச்சத்தீவு திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – தமிழக கடற்தொழிலாளர்களின் ஒற்றுமையை தெரியப்படுத்தும் இந்த விழா, எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இதனிடையே கச்சத்தீவு திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளை இலங்கை கடற்படை தற்போது தீவிரமாக முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com