Friday, March 8, 2019

வரலாற்றில் அதிகளவிலான மின்சாரப் பாவனை நேற்று பதிவானது - மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை அமைச்சு

நாட்டில் நேற்றைய தினமே வரலாற்றில் அதிகளவிலான மின்சாரப் பாவனை பதிவாகியிருப்பதாக மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்றுக் காலை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணிவரையில், 47 தசம் 4 கிஹாவோட்ஸ் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சின் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாள் ஒன்றுக்கு அண்ணளவாக 40 தொடக்கம் 42 கிஹாவோட்ஸ் மின்சாரமே பயன்படுத்தப்படுகிறது. மழை காலங்களில் அது 35 கிஹாவோட்ஸ்சாக குறைவடையும்.

நாட்டில் தறபோது நிலவும் உலர் காலநிலை காரணமாகவே மின்சாரப் பாவனை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் பொதுவாக மார்ச் மாத இறுதிப் பகுதியிலும், ஏப்ரல் மாத முதல் பகுதி அளவிலேயே அதிகளவிலான மின்சாரப் பாவனை பதிவாகும் என, சுலக்ஷன ஜயவர்த்தன குறிப்பிட்டார்.

இதேவேளை, சுற்றாடலுக்கு ஏற்ற வகையில் புதுப்பிக்கக்கூடிய வலு சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 24 மணித்தியாலமும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும்.

இது தொடர்பான ஆலோசனை சேவைகளையும், பயிற்சி செயலமர்வுகளையும் நடத்த, உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் குறைந்த செலவில் மின்சாரத்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு, மின் பாவனையாளார்களுக்கு கிடைக்கும் என்று சக்திவலுத்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com