Saturday, March 2, 2019

இந்த மாதத்திற்குள் சாதாரண தர பரீட்சையின் முடிவுகள் வெளியாகும் - பரீட்சைகள் திணைக்களம்

2018 ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையின் முடிவுகளை வெளியிடுவது தொடரில் பரீட்சைகள் திணைக்களம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம், நடைபெற்ற முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை மார்ச் மாதத்திற்குள் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார். ஆகவே கடந்த வருடம் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள், தங்கள் பரீட்சை பெறுபேறுகளை இந்த மாதத்திற்குள் தெரிந்து கொள்ள முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாடசாலை பரீட்சாத்திகள் பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் கால எல்லை கடந்த 25 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள அதேநேரம், நேற்றுடன் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் தனியார் பரீட்சாத்திகள் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு இந்த வருடத்தில் இனி மேல் கால நீடிப்பு சந்தர்ப்பம் இல்லையென்றும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com