Saturday, March 2, 2019

மஹிந்த – அனுர சந்திப்புக்கான புண்ணியநேரம் எதிர்வரும் 6ம் திகதி 4 மணி.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பில் ஜேவிபி யினரின் முன்மொழிவுகள் தொடர்பில் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் எதிர்வரும் 6ம் திகதி பிற்பகல் நான்கு மணிக்கு உத்தியோகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இச்சந்திப்பானது எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளதாக ஜேவிபி யின் பிரச்சார செயலாளர் பா.உ விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் அனுரகுமார , பா.உ விஜித ஹேரத், பா.உ சுனில் ஹந்துநெத்தி , பா.உ நளின் ஜெயதிஸ்ஸ மற்றும் கே.டி லால்காந்த ஆகியயோர் கலந்து கொள்வர் என்றும் தெரியவருகின்றது. இதேநேரம் கே.டி லால்காந்த மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாயின், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கவேண்டும் என்றும் அந்த நடைமுறையை கொண்டு செல்வதற்காக பலகோடி பணம் செலவிடவேண்டியுள்ளதாகவும் ஜேவிபி தெரிவிக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com