Saturday, March 2, 2019

இரணைதீவு மக்களை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நேரில் சென்று பார்வையிட்டது.

இரணைதீவு மக்களை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. அங்கு குடியேறியுள்ள பொதுமக்கள் முகங்கொடுக்கும் பிரச்சனைகளை கேட்டு அறிந்து, அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே குறித்த ஆணைக்குழு இந்த திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி கிளை மனித உரிமைகள் ஆணைகுழுவின் ஆணையாளர் திரு.கனகராஜ் தலைமையில் இந்த குழு, அங்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் முன்வைத்த முறைப்பாடு மற்றும் ஊடகங்கள் மூலம் வெளியான மக்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து, விரைவாக தீர்வுகளை வழங்க தமது ஆணைக்குழு தயாராக உள்ளதாக, மனித உரிமைகள் ஆணையார் இதன்போது குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின் போது, இரணைதீவில் குடியேறியுள்ள பொதுமக்கள், அதிகாரிகளிடம் தமது வாழ்வாதாரம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்து விளக்கியுள்ளனர். இந்த பகுதியில் குடியறி சுமார் ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், தாங்கள் உரிய முறையில் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தமது கவனத்திற்கு கொண்டு வந்து, எமக்கு உதவ வேண்டும் என, இரணைதீவில் குடியேறியுள்ள மக்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

இந்த மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இரணதீவில் உள்ள பாடசாலை, வழிபாட்டுத் தலங்கள்,வீடுகள் என்பவற்றையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com