Saturday, March 2, 2019

கே.டி. லால்காந்த, இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் - காவல்துறை

ஜே.வி.பி. யின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த காவல்துறையினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், இவரை அனுராதபுரம் - புத்தளம் புதிய சிறைச்சாலைக்கு அருகில் வைத்து, காவல்துறையினர் நேற்று மாலை கைது செய்தனர்.

கே.டி.லால்காந்த மது போதையுடன் வாகனத்தை செலுத்திச் சென்ற வேளையில், எதிரே வந்த உந்துருளி ஒன்றுடன் மோதியுள்ளார். இதன் காரணமாக உந்துருளியில் பயணித்த இரு பெண்கள் காயமடைந்து அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கே.டி.லால்காந்த உடன் கைது செய்யப்பட்டதுடன், அவரை இன்றைய தினம் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடக பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com