Saturday, March 2, 2019

வெங்கடாச்சலபதி தரிசனத்திற்காக, பிரதமர் இந்தியாவிற்கு விஜயம்

திருப்பதி வெங்கடாச்சலபதி ஆலய தரிசனத்திற்காக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக, பிரதமர் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதன்படி அவர் இன்று பிற்பகல் வேளையில் திருப்பதிக்கு விஜயம் செய்யவுள்ளார். திருப்பதி வெங்கடாச்சலபதி ஆலயத்தில் இடம்பெறவுள்ள விசேட வழிபாடுகளில் பங்கெடுத்து, இறையருள் பெறவே பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இரண்டு நாட்கள் விஜயமாக அங்கு செல்லும் பிரதமருடன், அவரது பாரியாரும் உடன் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு விஜயம் செய்த பின்னர், அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம், மாலை 4.30 அளவில் பிரதமர் திருப்பதியைச் சென்றடைவார். 

பின்னர் அங்கிருந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க திருமலைக்கு சென்று, சொகுசு விடுதியில் இரவு தங்கியிருந்து பின், நாளை அதிகாலை ஆலயத்தில் இடம்பெறும் வழிபாடுகளை முடித்துக் கொண்டு, இலங்கைக்கு திரும்பவுள்ளார்.

இந்த நிலையில் பிரதமரின் வருகையை முன்னிட்டு திருமலையில் விசேட பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com