Friday, February 8, 2019

இலங்கையின் மாற்றுத் திறனாளிப் பெண்கள், அதிகமான நெருக்கடிக்கடிகளை சந்திக்கின்றனர் - ஐக்கிய நாடுகள் சபை.

ஐக்கிய நாடுகள் சபையின் மகளிருக்கான பிரதிநிதி ஒருவர், இலங்கையின் மாற்றுத் திறனாளிப் பெண்கள், பல்வேறு வகையில் நெருக்கடிகளை சந்திப்பதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மாற்றுத்திறனாளி பெண்களும், சிறுமிகளும் பல்வேறு மட்டங்களில் ஒதுக்கப்படல், பாரபட்சம், துஷ்பிரயோகம் உள்ளிட்டவற்றை எதிர்நோக்குவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மகளிருக்கான அமைப்பின், இலங்கைக்கான பிரதிநிதி ரமயா சல்காதோ இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின் படி, அனைத்து வயதுப் பிரிவுகளிலும் மாற்றுத்திறனாளி ஆண்களை விட, மாற்றுத்திறனாளி பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

எனினும், இலங்கையில் மாற்றுத்திறனுடைய தொழிலில் உள்ளவர்களின் 15 வீதமானவர்கள் மாத்திரமே, பெண்கள் என கூறப்படுகின்றது.

இந்த நிலையானது, சந்தர்ப்பங்களை அணுகுவதிலுள்ள பாரிய இடைவெளியை குறிப்பதாக, ஐக்கிய நாடுகளின் மகளிருக்கான அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி ரமயா சல்காதோ தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த நிலைமையை மாற்றியமைத்து, இலங்கையின் மாற்றுத் திறனாளி பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம் என, அவர் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com