Friday, February 8, 2019

இந்திய பிரஜைகள் 09 பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்

சட்டவிரோதமாக நாட்டில் தங்கிருந்த இந்திய பிரஜைகள் 09 பேர் நுவரெலிய, பொரலந்தை பிரதேசத்தில் வைத்து பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த நிலையில் இவர்கள் கைதாகியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

24 மற்றும் 42 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைதாகிய இவர்களிடம் செல்லுபடியான விசா இருந்திருக்க வில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த 09 பேரும் இன்று நுவரெலிய நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com