Friday, February 8, 2019

பகிடிவதை என்ற போர்வையில் தாக்குதலுக்கு உள்ளான மாணவன்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் சக மாணவர்களினால் பகிடிவதைக்கு இலக்காகி தாக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன் தலைப்பகுதியில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு பகிடிவதை என்ற போர்வையில் தாக்கப்பபட்ட மாணவன், ஊடகவியலாளராகவும் செயற்பட்டு வரும் ப.சுஜீவன் என்று கண்டறியப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வாளாகத்திற்குள் குறித்த மாணவனை சூழ்ந்த நான்காம் வருட மாணவர்கள், பகிடிவதை எனக்கூறி, அவர் மீது சரமாரியாகத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com