Friday, February 8, 2019

ஜனாதிபதி நல்லவர் என்றாலும் அவரது அதிகாரங்கள் சிலரினால் தவறான பயன்படுத்தப்படுவதாக ஸ்ரீ விமல தேரர் தெரிவிப்பு

நாட்டில் தற்போது எழுந்துள்ள சிக்கலான நிலைமையினை ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும் என, கெடம்பே ராஜோபவனாராமாதிபதி கெப்பிடியாகொட ஸ்ரீ விமல தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் அனைத்திற்கும் ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும். அவர் தனது பொறுப்பிலிருந்து விலகி நிற்க முடியாது எனத் தெரிவித்தார். மேலும், ஜனாதிபதி நல்ல மனிதர் என்ற போதிலும், அவரது அதிகாரங்கள் சிலரினால் தவறான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் நாட்டில் தேர்தல், சட்டம், ஒழுங்கு என எதுவுமின்றி ஒரு தன்னிச்சையான நாட்டின் ஆட்சி நிலவுகின்றமையை காணக்கூடியதாக இருப்பதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, ஸ்ரீ விமல தேரரை சந்தித்தபோதே தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com