Friday, February 8, 2019

அரசியலே தெரியாத விக்னேஸ்வரனை, முதலமைச்சராக்கியமை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதல் பிழை - சரவணபவன்.

அரசியலே தெரியாத சி.வி.விக்னேஸ்வரனை, வடமாகாண முதல்வராக்கியமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பிழை என, அந்த கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு, தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்காக மேற்கொள்ள வேண்டிய முடிவுகளை 100 சதவீதம் நேர்த்தியாக செய்துள்ளது. எனினும் வழங்க வேண்டிய சில தீர்வுகளை வழங்காமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு ,காலம் தாழ்த்தி வருகின்றது என்று, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குறிப்பிட்டார்.

கடந்த 2010 ஆம் ஆண்டும்; 2015 ஆம் ஆண்டும் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், வடக்கில் மாற்றுக் கட்சிகளை மக்கள் நிராகரித்தமை நாம் அறிந்ததே. வெளிநாட்டில் இருக்கும் பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள், கடந்த தேர்தலில் மாற்றுக் கட்சிகளுக்கே ஆதரவு வழங்கியுள்ளன.

எனினும் களத்தில் இருந்த முக்கிய தரப்பினரான மக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே ஆதரவு வழங்கியதாகவும், அதேபோன்று எதிர்வரும் தேர்தலிலும், மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே ஆதரவு வழங்குவார்கள் என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com