Thursday, February 28, 2019

மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றத்தில் மாகாண சபை உறுப்பினர் கைது

16 வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தென் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 26ம் திகதி குறித்த மாணவியை தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார என்பவர், பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த சந்தேக நபர் அக்மீமன பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த சந்தேகநபர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை அங்கத்துவப்படுத்தும் தென் மாகாண சபை உறுப்பினர் ஆவர்.

இந்த நிலையில் இன்று அவரை காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com