Thursday, February 28, 2019

கூட்டமைப்பிற்கு தமிழர்களின் விடயத்தில் அக்கறையில்லை, வெறும் அரசியலே செய்கிறார்கள் - கெஹெலிய ரம்புக்வெல

கூட்டமைபிற்கு தென் பகுதியில் உள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறையில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கூட்டமைப்பிற்கு தமிழர்களின் விடயத்திலும் அக்கறையில்லை. ஏன் என்றால் அவர்கள் தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்த தீர்விற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வைத்துக் கொண்டே வடக்கில் அரசியல் செய்கின்றார்கள். அவர்கள் தமது அரசியல் செயற்பாட்டிக்காக தமிழ் மக்கள் தொடர்பில் மாத்திரம் சிந்திப்பதால் அவர்களால் தெற்கு மக்களைக் குறித்து எந்த வழியிலும் சிந்திக்கப்போவதில்லை.

இந்த விடயங்களை எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் இருந்தபோது அவதானிக்க முடிந்தது என்று, கெஹெலிய ரம்புக்வெல மேலும் குறிப்பிட்டுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com