Thursday, February 28, 2019

இலங்கை ரூபாக்களை கடத்த முற்பட்டவர் கைது

சிங்கப்பூருக்கு இலங்கை ரூபாக்களை சட்டவிரோதமாக கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர், இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயதுடைய திருகோணமலை, தம்பலகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரேவரே இவ்வாறு கைதாகியுள்ளார். குறித்த சந்தேக நபர் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதாக பொலீஸார் தெரிவிக்கின்றனர்.

அதிகாலை 03.30 மணியளவில் குறித்த நபர் சிங்கப்பூருக்கு பயணிக்க இருந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் அவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபர் வைத்திருந்த பயணப் பொதியில் இருந்து 1000 ரூபா மற்றும் 5000 ரூபா நாணயத்தாள்கள் அடங்கிய 48 இலட்சத்து 99,000 ரூபா கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்கப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com