Thursday, February 28, 2019

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க விசேட நீதிமன்றம் - பேராசிரியர் அகுரடியே நந்த நாயக தேரர்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதற்கு விசேட நீதிமன்ற கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்று பேராசிரியர் அகுரடியே நந்த நாயக தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த விசேட நீதிமன்ற கட்டமைப்பு ஊடாக மக்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பினைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார். போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மிக இலகுவில் நீதிமன்ற தீர்ப்புக்களை நடைமுறைப்படுத்த முடியாது.

கடந்த காலங்களில் இல்லாத வகையில் போதைப்பொருள் பாவனை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் இன்னும் திறம்பட முன்னெடுக்கப்பட வேண்டும். ஆகவே போதை பொருள் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com