Thursday, February 28, 2019

120 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹொரோயினுடன் ஒருவர் கைது - கிரேண்ட்பாஸில் மேலும் இருவர் கைது

குளியாப்பிட்டிய பகுதியில் கும்புராபொல பகுதியில் 120 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹொரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 27 வயதுடைய நபர் ஒருவரே 1 கிலோ கிராம் ஹொரோயினுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, இவர் கைதாகியுள்ளார். அவரிடம்
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, அவரின் வீட்டில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 9 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு – கிரேண்ட்பாஸ் பகுதியில் 25 கிராம் 740 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்தபோது கைதாகியுள்ளனர். குறித்த இரண்டு சந்தேகநபர்களிடமிருந்து 2,40,000 ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com