Wednesday, February 6, 2019

விடுதலை புலிகளின் குமரன் பத்மநாதனிடம் இருந்த நிதி, தற்போது எங்கே போனது? - நளிந்த ஜயதிஸ்ஸ.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்கள், உடமைகளுக்கு பொறுப்பாக இருந்த குமரன் பத்மநாதனின் வெளிநாட்டு நிதி, தற்போது எங்குள்ளது? என, நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளிநாடுகளில் குமரன் பத்மநாதனுக்கு இருந்ததாக கூறப்படும், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், கப்பல்கள், தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள், அவரிடமிருந்த நிதிக்கு இப்போது என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது.

இதற்கு காரணமானவர்கள் அரசியல்வாதிகளே. அரசியல்வாதிகளின் செயற்பாடுகள், அவர்களுடைய பணம் என்பவற்றால் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்ட கைதிகள் பரிமாற்ற சட்டமூலம் இன்று, நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட நிலையில், அது தொடர்பிலான உரையின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், அந்த நாடுகளில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால், ஏதாவதொரு தண்டனைக் கிடைத்திருக்கும்.

ஆனால் இங்கு கொண்டு வந்ததன் பின்னர், அரசியல்வாதிகளின் செயற்பாடுகள், அவர்களுடைய பணம் என்பவற்றால், அவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்.

நாம் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். அதற்கு நாம் இணக்கம் தெரிவிக்கின்றோம். ஆனால் சட்டம் உறுதியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அர்ஜூன மஹேந்திரனைக் கைது செய்யாமையினாலேயே, ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்குகள் குறைந்ததாக சரத் அமுனுகம கூறினார்.

எனினும் எங்கள் நாட்டு மக்கள் அவ்வாறு வாக்களிப்பார்களா? என்று நான் சிந்திக்கவில்லை. உதயங்க வீரதுங்க, ஜாலிய விக்ரமசூரிய உள்ளிட்டவர்களைக் கைது செய்து கொண்டு வராமையினால், அவர்களுக்கு எவ்வளவு வாக்குகள் குறைந்திருக்க வேண்டும் எனச் சிந்திக்க வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com