Wednesday, February 6, 2019

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில், கோட்டாபாயவே முன்னிலையில் உள்ளார். - விமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே தற்போது முன்னிலை பெற்றுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக, பல ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் குறித்து, இன்று கருத்து வெளியிட்ட போதே, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒன்பது மாதங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன. இந்த நிலையில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து, பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எனினும் பொருத்தமான நேரத்தில் தமது பொது வேட்பாளர் குறித்த அறிவிப்பினை, முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ வெளியிடுவார்.

அத்துடன் இந்த பட்டியலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே, தற்போது முன்னிலை பெற்றுள்ளார்.

அதுவே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகவும் காணப்படுகின்றது. அவர் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பல தடவைகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒருவராவார்.

எனவே எதிரவரும் ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அடுத்து எந்த தேர்தல் இடம்பெற்றாலும், வெற்றி என்பது எமது தரப்பிற்கே கிடைக்கும் எனவும், அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com