Friday, February 1, 2019

அவசியமற்ற கட்டணங்களை அறிவிடும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - கல்வி அமைச்சு

மாணவர்களுக்கு அவசியமற்ற கட்டணங்களை அறிவிடும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

வசதிக்கட்டணம் மற்றும் சேவைக் கட்டணத் தொகையிலும் பார்க்க கூடுதலான தொகையை சட்டவிரோதமாக அறவிடும் அதிபர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், அமைச்சின் செயலாளருக்கு இந்த விடயம் தொடர்பில்ஆலோசனைகளை வழங்கியிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வசதிக்கட்டணம் மற்றும் சேவைக் கட்டணத்தை அறிவிடும்பொழுது தேசிய பாடசாலையாயின் கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண பாடசாலையாயின் மாகாண கல்வி செயலாளர்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாய நிபந்தனையாகும்.

அவ்வவாறு இல்லாத பட்சத்தில் தமது விருப்பத்திற்கமைவாக சுற்றறிக்கையை மீறிய வகையில் பாடசாலை அதிபர்கள் கட்டணங்களை அறிவிட முடியாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பான முறைப்பாடுகளை 1998 என்ற உடனடி தொலைபேசி இலக்கம் ஊடாக கல்வி அமைச்சுக்குக்கு பொதுமக்களால் அறிவிக்க முடியும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com