Friday, February 1, 2019

மூன்றாவது நாளாகவும் தொடரும் சுங்க அதிகாரிகளின் தொழிற் சங்கத் போராட்டம்

சுங்க அதிகாரிகளின் தொழிற் சங்கத் போராட்டம் இன்றும் தொடர்கின்றது.

சுங்கப் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு, ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்வதாக சுங்க ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

நிதி அமைச்சு இந்த விடயம் தொடர்பில் தலையிட்டு உரிய தீர்வை பெற்றுத்தராமையே, தொடர் போராட்டத்திற்கு காரணமென சுங்க அதிகாரிகள் சங்க தலைவர் உதித்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற ரியல் அட்மிரல் கலாநிதி ஷமால் பெர்னாண்டோவை சுங்க பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியதையடுத்தே குறித்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, ஜெனரல் H G .சுமணசிங்க சுங்க அமைச்சின் பதில் பணிப்பாளர் நாயகமாக நேற்று நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com