Friday, February 1, 2019

ஜனாதிபதியை மீண்டும் மீண்டும் சீண்டும் குமார வெல்கம

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேர்தலில் மீண்டும் போட்டியிட்டால் வெற்றியடைய முடியாத சூழ்நிலையே காணப்படுவதாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு கண்டனம் வெளியிட்டு, ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக குமார வெல்கம வெளியிட்டு வருகின்றார்.

இதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு மாத்திரமே தகுதியுள்ளது என்று கட்சி அறிவித்துள்ளதாக, அதன் உறுப்பினர் துமிந்த திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com