Friday, February 1, 2019

சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலில் 20 பொலிஸாரை காப்பாற்றிய சார்ஜன்ட் மரணம்.

1984 ல் ரெலோ இயக்கத்தினரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலிருந்து 20 பொலிஸாரை மிகத் திறமையாக காப்பாற்றிக்கொண்டு காட்டுவழியே சென்று கிளிநொச்சி இராணுவ முகாமை அடைந்த சார்ஜன்ட பாலசிங்கம் கிருஷ்ணபிள்ளை கடந்த 29 ம் திகதி மரணமடைந்துள்ளார்.

வடமாராட்சி பருத்திதுறையை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை 1962ம் ஆண்டு பொலிஸ் கொஸ்தாபலாக சேவையில் இணைந்து 27 வருட சேவையின் பின்னர் 1989 ம் ஆண்டு ஒய்வுபெற்றிருந்தார்.

ஓய்வு பெற்ற சார்ஜனின் உடலத்திற்கு இன்று வட பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்ணான்டோ மரியாதை செலுத்தியுள்ளார். இதன்போது யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுசில குமார உதவி பொலிஸ் அத்தியட்சகர் உடுகம சூரிய மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டு குடும்ப உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் 3 ம் திகதி பூரண பொலிஸ் மரியாதையுடன் இடம்பெறும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com