Friday, February 1, 2019

மாகாண சபை தேர்தல் இடம்பெறும் காலத்தை வெளியிட்ட தேர்தல் ஆணைக்குழு.

எதிர்வரும் மே மாத இறுதியில், அல்லது ஜூன் மாத ஆரம்பத்தில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இதனை தெரிவித்தார். இன்றைய தினம் தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஜனநாயகத் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள டிசம்பர் மாதத்திற்கு முன்னர், மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என கோரியுள்ளார்.

நாட்டுக்கு உகந்த தேர்தல் முறை எது என்பது தொடர்பில் நான் கூற விரும்பவில்லை. அதனை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்.

ஆனால் தற்போது உடனடியாக பழைய முறைமைக்கு அமையவே தேர்தலை நடத்த வாய்ப்புள்ளது.

புதிய முறைமைக்கு அமைய தேர்தலை நடத்துவதென்றால் நிறைவேற்றப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை ஒன்று இல்லை.

அவ்வாறு இல்லாமல் எந்ததெந்த தொகுதிகள் என்பதை விளங்கிக் கொள்வது, கடினம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com