Friday, February 1, 2019

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக விண்ணப்பத்திற்கான இறுதி நாள் இன்று வரை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான காலத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நீடித்துள்ளது.

ஆகவே எதிர்வரும் 8 ஆம் திகதி வரை மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே கடந்த வருடம் உயர்தர பரீட்சையில் சித்திபெற்ற 167,907 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com