Friday, February 1, 2019

இணக்கப்பாட்டு கூட்டணி தேசிய அரசாங்கத்தை தோற்றுவிக்கும் முயற்சி - லக்ஷ்மன் கிரியெல்ல

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியும் நல்லாட்சி கொள்கைகளுக்கு உடன்பட்டுச் செல்லும் ஏனைய அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு புதிய இணக்கப்பாட்டு கூட்டணி தேசிய அரசாங்கத்தை உருவாக்கவுக்கும் நோக்குடன் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜபக்ஷாக்களின் கடன் சுமைகளை செலுத்திக் கொண்டு மக்களுக்கு அதிகபட்ச உதவிகளை வழங்குவது மற்றும் நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்வது போன்ற நடவடிக்கைகளுக்காக ஆதரவு வழங்கும் சகல கட்சிகளும், இணக்கப்பாட்டு கூட்டணி அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள முடியும் என சபைத் தலைவர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணக்கப்பாட்டு கூட்டணி தேசிய அரசாங்கத்தில் இணையவுள்ள கட்சி எது என்பது தொடர்பில் தற்போது எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. தேசிய அரசாங்கம் அமைக்கும் பிரேரணைக்கான வாக்கெடுப்பு நடாத்தப்படும் போது பாராளுமன்றத்தில் கண்டுகொள்ள முடியும் எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com