Saturday, February 23, 2019

ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடர் திங்கட்கிழமை ஆரம்பம்...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

சுவிஸ்சர்லாந்தில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தொடர், எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கவுள்ள இந்தக் கூட்டத் தொடர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வாகும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பின்னர், அதன் பிரதான பொறுப்பை பிரித்தானியா ஏற்கவுள்ளது.

இந்த நிலையில் ஆரம்பிக்கப்படவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான கூட்டுத் தீர்மானமொன்றை பிரித்தானியா சமர்ப்பிக்கவுள்ளது.

மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மீளமைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் இந்தத் தீர்மானத்தில் கவனம் செலுத்தப்படும் என கூறப்படுகின்றது.

இலங்கை தொடர்பாக பிரித்தானியா கொண்டுவரும் இந்த தீர்மானத்திற்கு கனடா, ஜேர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவளிக்கவுள்ளன.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை அரசாங்கம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

அரசியலமைப்பில் கொண்டு வரப்பட வேண்டிய புதிய திருத்தம் மட்டுமே, இன்னமும் அமுல்படுத்தப்பட வேண்டிய பரிந்துரையாகுமென அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு தாம் தெரிவித்துள்ளதாகவும் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com