Saturday, February 23, 2019

படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, எதிர்வரும் 10 ஆம் திகதி முதல், இழப்பீடு - விவசாய அமைச்சு

நாட்டின் பல மாவட்டங்களில், படைப்புழுவினால் அழிவடைந்த செய்கைகளுக்காக இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள், எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்தது.

படைப்புழுவினால் சுமார் 12,000 ஏக்கர் செய்கை நிலங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக, அமைச்சின் செயலாளர் கே.டி.ருவன்சந்திர குறிப்பிட்டார்.

அத்துடன் பல செய்கைகள் பகுதியளவிலும், பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படும் என, விவசாய அமைச்சு முன்னர் அறிவித்திருந்தது.

அதன்படி அடுத்த மாதம் 10 ஆம் திகதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என, விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

படைப்புழுவின் தாக்கத்தால், நாட்டின் பல பகுதிகளில், சோளம், வாழை உள்ளிட்ட பல பயிர் செய்கைகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com