Saturday, February 23, 2019

ஜனாதிபதி பதவி விலகுவதே சாலச் சிறந்தது - பிமல் ரத்நாயக்க

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக செயற்படும் நோக்கத்தில், அரசியலமைப்பு பேரவை மீது குற்றம் சுமத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பதவி விலகுவதே சாலச் சிறந்தது என, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அரசியலைப்பு பேரவை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்காக கருத்து தெரிவிக்கும் போதே, பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்தார்.

அரசியலமைப்பு பேரவையினை விமர்சிக்கும் தகைமை ஜனாதிபதிக்கு கிடையாது. இவரது கருத்துக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும்.

அரசியலமைப்பு பேரவை நூறு சதவீதம் சிறப்பானது அல்ல. ஒரு சில குறைப்பாடுகள் அதிலும் காணப்படுகின்றன.

அவற்றை சுட்டிக்காட்டியே மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினர் இன்று கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றனர்.

கடந்த காலங்களில் அரசியலமைப்பினை தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்தமையினையும், அதனை உயர் நீதிமன்றம் உணர்த்தியமையினையும் ஒருபோதும் மறந்து விட கூடாது.

ஆகவே அரசியலமைப்பு பேரவை நீக்கப்பட வேண்டியது அல்ல. அதனை பலப்படுத்த வேண்டும். அதுவே சிறந்த தீர்வாக அமையும் என, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com