Sunday, February 24, 2019

2,945 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின், கொள்ளுப்பிட்டியில் கண்டுபிடிப்பு

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் 2,945 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வர்த்தக கட்டடத் தொகுதியின் வாகனத் தரிப்பிடத்தில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டபோதே இவை கைப்பற்றப்பட்டதாக, பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பில், 294 கிலோ 490 கிராம் ஹெரொயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கைப்பற்றப்பட்ட பாரியளவான போதைப்பொருள் தொகை இதுவென்று, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இரண்டு வான்களில் 5 பாரிய பொதிகளில் வைக்கப்பட்டிருந்த 272 சிறு பொதிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த ஹெரோயின் கைபட்டப்பட்டபோது இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை பகுதியை சேர்ந்த 43 வயதான மொஹமட் பஷீர் மொஹமட் அச்மிர் மற்றும் 32 வயதான மொஹமட் ரிலா அஹமட் ருஸ்னி ஆகியோர் என்று பொலிசார் கூறுகின்றனர். சந்தேகநபர்கள் இரண்டு போரையும் தடுத்துவைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com