Thursday, February 28, 2019

இலங்கையில் இருந்து பாகிஸ்தானுக்கு எந்த விமானமும் பயணிக்காது

பாகிஸ்தானுக்கு செல்லும் விமானங்கள் இன்று இரத்து செய்யப்படுவதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் வான்பரப்பில் விமானங்கள் பயணிக்க அந்தநாட்டு விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தடை விதித்துள்ளதால் இந்த விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி கராச்சி மற்றும் லாஹுர் விமான நிலையங்களுக்கான செல்லும் விமானங்கள் இன்று சேவையில் ஈடுபட மாட்டாது என்று ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

தொடர்ந்து சில நாட்களாக இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கிடையில் மாறி மாறி இடம்பெற்று வரும் தாக்குதல்கள்
காரணமாக காஷ்மீர் எல்லைப்பகுதி உள்ளிட்ட பிரதேசங்களில் பதற்ற நிலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com