Thursday, February 28, 2019

86 KG மேற்பட்ட கேரளக்கஞ்சாவுடன் இருவர் கைது

வடக்கு கடற்பரப்பில் 86 KGகும் மேற்பட்ட கேரளக்கஞ்சாவை கடற்படையினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் மூலம் கைப்பற்றியுள்ளதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.

இதன்போது சந்தேக நபர்கள் இரண்டு பேரும் டிங்கி படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இதனிடையே 2019 ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம் வடக்கு கடற்பரப்பிலிருந்து 442 KG மேற்பட்ட கேரளக்கஞ்சா சிக்கியுள்ளதாக இலங்கை கடற்படை கூறுகின்றது.

இந்த நிலையில் எதிர்காலத்திலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கடல் பிரதேசங்கள் ஊடக நடைபெறும் போதைப்பொருள் வர்த்தகத்தை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கடற்படை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com