Thursday, February 28, 2019

கொலை சதி முயற்சி தொடர்பில் கைதான இந்திய பிரஜை விடுதலை - பிறிதொரு குற்றச்சாட்டில் விளக்கமறியல்

பிரமுகர் கொலை சதி முயற்சி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய பிரஜையான மேர்சிலி தோமஸ் என்பவர் அந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் கொலை சதி முயற்சி தொடர்பான வழக்கு விசாரணைக்கு நேற்று நடைபெற்றது. இதன்போதே பிரமுகர் கொலை சதி முயற்சி குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுதலை பெற்றுள்ளார்.

எவ்வாறான போதிலும் கடந்த வருடம் செப்டம்பர் 21 ஆம் திகதியில் இருந்து குறித்த இந்திய பிரஜை வீசா முடிவுக்காலம் முடிந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்தமையினால் அவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com