Tuesday, February 26, 2019

இராணுவ வீரர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை

இராணுவ வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்லேகல இராணுவ முகாமில் சம்பவித்துள்ளது.

26 வயதுடைய குண்டசாலை பிரதேசத்தையுடைய இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இராணுவ வீரர் எதற்காக தன்னைத் தானே சுட்டுக்கொண்டார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

அவரது உடலம் கண்டி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பல்லேகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com